Main Menu

ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தல்!

மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும், மியன்மாரில் நிலவும் சூழ்நிலை கவலை அளிப்பதாகவும் ஐநா பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

எனினும், அடுத்த ஒரு வருடம் வரை நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசாங்கத்துக்கும் அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரச அதிகாரிகளை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...