Main Menu

அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து இளவரசர் ஹரி – மேகன் விலகுகின்றனர்

சசெக்ஸ் இளவரசர் ஹரி, சீமாட்டி மேகன் ஆகியோர் பிரித்தானிய அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதனால் அரச குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் இளவரசர் ஹரியும் மேகனும் அரச குடும்பத்தின் எந்தவொரு மூத்த உறுப்பினரையும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ள அவர்கள் இருவரும் மகாராணியின் மாட்சிமையை ஏற்றுக்கொள்வதாகவும் ஆதரிப்பதாகவும் கூறியுள்ளனர்.

நேற்றுப் புதன்கிழமை அரச தம்பதியர் தங்களது இன்ஸ்ரகிராம் மூலமே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். மேலும் தாம் பல மாதங்களாக யோசித்து விவாதித்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் நிதி ரீதியாக சுயாதீனமாகப் பணியாற்ற தாம் விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பகிரவும்...