Main Menu

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டது.

மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை 2 ஆயிரம் பக்கங்களை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 198 முறைப்பாடுகளின் விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...