Main Menu

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவு கிளிநொச்சியில் திறப்பு!

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகம் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகப் பிரிவே இன்று (சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வரவேற்றதைத் தொடர்ந்து திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர்கள், கிளிநொச்சி பிரதேச செயலாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பகிரவும்...