Main Menu

Nantes தேவாலய தீ விபத்து! – சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

Nantes தேவாலய தீ விபத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.  கடந்தவாரத்தில் இடம்பெற்ற இந்த தீ விபத்தை அடுத்து, அங்கு பணி புரிந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டதோடு, நேற்று சனிக்கிழமை காலை மீண்டும் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் 39 வயதுடைய குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பகிரவும்...