Main Menu

அடுத்த ஜி-20 மாநாட்டை சவுதி அரேபியாவில் நடத்த திட்டம்!

எதிர்வரும் ஆண்டுக்கான ஜி-20 மாநாடு, சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜி-20 மாநாட்டை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை, சவுதி அரேபியா பெற்றுள்ளது.

இதற்கமைய, அடுத்த ஆண்டுக்கான மாநாடு, மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு, நவம்பர், 21ஆம் திகதி மற்றும் 22ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் வளர்ச்சி அடைந்த, 20 நாடுகளை உள்ளடக்கிய, ஜி-20 அமைப்பில், அர்ஜென்டினா, அவுஸ்ரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட, வளர்ச்சி அடைந்த நாடுகள், அங்கமாக வகிக்கின்றன.

பகிரவும்...