மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு விருது

சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான 2ஆவது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கியது.
அதில், தூய்மை பராமரிப்புகளுக்கான இரண்டாவது இடமாக மீனாட்சியம்மன் ஆலயம் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், குப்பைகளை பிரித்து சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள், சுழற்சி முறையில் சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜம்மு- காஷ்மீரிலுள்ள வைஷ்னோ தேவி ஆலயம், சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.