தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு

வட – கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது.
வவுனியா – கண்டி வீதியிலுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் காரியாலயத்தில் இன்று(திங்கட்கிழமை) நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிஸாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த நேர்முகத்தேர்வு இடம்பெற்றுள்ளது. இந்த நேர்முகத்தேர்வில் 850 பேர் பங்கேற்றுள்ளனர்.
இது வரை காலமும் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்த நிலையில், தற்போது இந்த நேர்முகத் தேர்வுகள் வடமாகாணத்தின் மத்திய இடமான வவுனியாவில் நடைபெற்று வருவதுடன் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஆரம்ப பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.