Main Menu

மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த  ஜீன் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், இன்று (திங்கட்கிழமை) மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்தொடர் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி இன்று நடைபெறவுள்ள முதல் நாள் அமர்வில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.

இதன்போது தொகுதி சார்ந்து எழுப்பப்படும் பிரச்சினைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.

அதன்படி குடிநீர் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் குறித்த பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தி.மு.க சார்பில் கொண்டுவரப்பட இருந்த சபாநாயகர் மீதான நம்பிக்கையில் தீர்மானம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...