Main Menu

அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு

அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள  இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், தூக்கிலுடும் பணியை நிறைவேற்றுவதற்கு அவர்கள் எந்நேரத்திலும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இவர்களின் அடையாளத்தை எந்த ஊடகத்திற்கும் வெளிப்படுத்தாதிருக்க சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பகிரவும்...