Main Menu

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி தொடர்பாக முறையான நாடாளுமன்ற விசாரணை நடத்தக் கோரி சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் வழங்கப்படவில்லை என சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறைகளை மீறி சபாநாயகர் மௌனம் காத்துவருவது, சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்கள் அழிக்கப்படவோ அல்லது மறைக்கப்படவோ வாய்ப்பளிப்பதாக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் மைத்ரி குணரத்ன கையொப்பமிட்ட விசேட கடிதமொன்றின் மூலம் இந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான முதலாவது கடிதம் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.