Main Menu

Flixbus விபத்து – இலங்கை பிரஜை உட்பட பலர் காயம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் இருந்து பரிஸ் நோக்கி வந்த Flixbus காலை 11.50 மணியளவில் விபத்துக்குள்ளாகி பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர் . Somme மாவட்டத்தை ஊடறுக்கும் A1 நெடுஞ்சாலையில் விபத்து  இடம்பெற்றுள்ளது.

நெடுஞ்சாலை 13 இல் இருந்து A1 நெடுஞ்சாலைக்கு நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்குள் 33 பயணிகள் பயணித்துள்ளனர். இவர்களில் 11 பிரெஞ்சு பயணிகளும், 10 பிரித்தானிய பயணிகள், ஐந்து அமெரிக்கர்கள், இரண்டு ருமேனியா பயணிகள், ஸ்பெயின், அவுஸ்திரேலிய, மொரீசிய, ஜப்பானிய பயணிகளுடன் ஒரு இலங்கை பிரஜையும் பேருந்தில் பயணித்திருந்தார்.  பிறிதொரு வாகனம் எதுவும் விபத்தில் தொடர்புபடவில்லை எனவும், பேருந்தில் பயணித்த அனைவருமே காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இலேசான காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நால்வர் மிக மோசமான காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும், அவர்கள் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...