இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு

தனது சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது. தனதுமேலும் படிக்க...
நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க , நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். தற்போதைய உலகளாவிய போர்ச் சூழ்நிலையால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் அதற்குக் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் எரிபொருள் மற்றும் எரிசக்திக்குச்மேலும் படிக்க...
இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி

இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானதை அடுத்து, கொழும்புமேலும் படிக்க...
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும், இந்திய திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார்.நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்மேலும் படிக்க...
ஜனாதிபதிக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு புதியமேலும் படிக்க...
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) சுரேஷ் சலே தாம் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் காவல்துறை மா அதிபர்மேலும் படிக்க...
விமான நிலையத்தில் 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச்மேலும் படிக்க...
எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு தேடி ரஷ்யா செல்லும் அமைச்சர் விஜித

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்குத் தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வது குறித்து மாஸ்கோவில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை அவர் முன்னெடுக்கவுள்ளார். கடந்தமேலும் படிக்க...
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA

சுகாதார அமைச்சருடன் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடைபெற்று வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளது. மருத்துவர்களின் இடமாற்றங்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்குப் பிந்தைய நியமனங்கள் தொடர்பான கவலைகள் காரணமாகமேலும் படிக்க...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நேற்று (05) நள்ளிரவு அமுலுக்கு வரும் கையில் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 12.5 கிலோ சிலிண்டரின் விலையினை 775 ரூபாவினால் உயர்த்தியுள்ளதுமேலும் படிக்க...
புத்தாண்டில் QR அறிமுகமாகும் விதம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்மேலும் படிக்க...
பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி எங்கே? – உயிர்த்த ஞாயிறு நினைவேந்தலில் சஜித்
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கடந்த கால மற்றும் தற்போதையமேலும் படிக்க...
இன்று முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கிறது

சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இன்று முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று நண்பகல் 12.13 இற்கு தொடந்துவ, ரத்கம, யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, ரன்ன, கலமட்டிய மற்றும்மேலும் படிக்க...
உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லை

இன்று உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லாமல், அதிகாரத்தை விரும்புபவர்களாகவும், சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சென். லூசியஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனையின் போது கொழும்பு பேராயர்மேலும் படிக்க...
சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு மஹிந்தவுக்கு அவசர உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ,ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும்மேலும் படிக்க...
நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்
தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் நாளை (06) காலை 9:30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்பாக அமைதிப் போராட்டம் நடத்தவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போதுமேலும் படிக்க...
பிரதமரின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி

கிறிஸ்தவப் பெருமக்கள் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும், இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவுகூருகின்ற இந்த உன்னதமான ஈஸ்டர் தினம், உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் இறை ஆசீர்வாதம் நிறைந்த இனிய ஈஸ்டர் திருநாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி

உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உயிர்த்த ஞாயிறுமேலும் படிக்க...
அமைச்சருடன் மோத வேண்டுமானால் நீதிமன்றம் செல்லுங்கள்; நோயாளிகளைப் பழிவாங்க வேண்டாம்” – சுகாதார அமைச்சர்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு எவ்வித அடிப்படையுமற்றது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நீதிமன்றத்தை நாடுமாறு அந்த சங்கத்திற்குப் பகிரங்க சவால் விடுத்துள்ளார். மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 444
- மேலும் படிக்க

