இலங்கை
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் முழுமையான ஆதரவளிக்கும் – ஜப்பானிய தூதர்
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (mizukoshi hideaki) தெரிவித்தார். நில மானிய முறைமை சமூகத்திலிருந்து புதிய ஆட்சி முறையை நோக்கியமேலும் படிக்க...
வெடுக்கு நாறிமலையில் கோயில்கள் ஏதும் இல்லை : பௌத்த மரபுரிமைகளை மீறினால் கைதுகள் இடம்பெறும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். வடக்கு மற்றும் கிழக்கு வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைப்பட்சமாக கருத்துரைப்பதை எதிர்க்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனமேலும் படிக்க...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலம் ஜனநாயக பாராளுமன்ற முறைமையே தோல்வியுறுகிறது – பிரதமர்
போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி அணிதிரண்ட போது தமது உயிரை பணயம் வைத்து அதனை பாதுகாக்க செயற்பட்டவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஜனநாயக பாராளுமன்ற முறைமையே தோல்வியுறுகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில்மேலும் படிக்க...
பொலிஸார் நீதிமன்றை தவறாக வழி நடாத்துகின்றார்கள் – யாழில் சட்டத்தரணி மனு தாக்கல்
பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்துகிறார்கள் என யாழ்ப்பாண நீதிமன்றில் மன்றில் சட்டத்தரணி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபில் ஒருவருக்கு எதிராகவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணிமேலும் படிக்க...
இலங்கையில் வாய்புற்று நோயினால் தினசரி 3 மரணங்கள் பதிவு
வாய் புற்றுநோய் பாதிப்பினால் தினசரி 3 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. வெற்றிலை , புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதன் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் மருத்தவ சங்கம் தெரிவித்துள்ளது. வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இருதயநோய் மற்றும்மேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதார கொள்கை பலனளிக்க ஆரம்பித்துள்ளது – சர்வதேச நாணயநிதியம்
இலங்கைக்கான அடுத்த கட்ட திட்டம் தொடர்பில் இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணநிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளித்ததும் இலங்கைக்கு மூன்றாவது கட்ட நிதியுதவியான 337 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
இந்த வருடத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளதாகவும் விமானமேலும் படிக்க...
கோப் குழுவிலிருந்து அநுர குமார உள்ளிட்ட 9 பேர் இதுவரை விலகல்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (19) மேலும் மூவர் இராஜினாமா செய்துள்ளதுடன், அக் குழுவிலிருந்து இன்று வரை ஒன்பது உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, வசந்தயாப்பாமேலும் படிக்க...
அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் – கால்நடை வைத்தியர்கள்
வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் . பகல் ஙேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடைமேலும் படிக்க...
முதலில் ஜனாதிபதி தேர்தல் – அமைச்சர்களிடம் ஜனாதிபதி
ஜனாதிபதி தேர்தலை முதலில் எதிர்கொள்வதற்கு அமைச்சர்கள் தயாராகவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் அரசமைப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறவேண்டும் அதனடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும்மேலும் படிக்க...
வெடுக்குநாறி மலையில் கைதான 8 பேரும் விடுதலை: வழக்கு தள்ளுபடி
வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியாமேலும் படிக்க...
வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
வெடுக்குநாறிமலை கைதுகள் தொடர்பில் தமிழ் கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன . கைதுசெய்யப்பட்டுள்ள எட்டுபேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழ்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். போலிகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க
பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடாத்தினால் கூட அரசாங்கத்தினால் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது எனதேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலே முதலில் நடைபெறவேண்டும் என தனதுகட்சி விரும்புவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறித்த ஐலண்ட் நாளிதழின் கேள்விக்கு பதில் அளிக்கையில்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து தமிழர் தாயகம் உரிமை கோரிக்கையை சிதைக்க முயற்சி -வெடுக்குநாறி சம்பவங்கள் குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை
வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்வெளியிட்டுள்ளது இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்கா அரசும் அதன் இராணுவஇ போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டுமேலும் படிக்க...
நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள சிறிய குழுவினர் மாற்றங்களை தடுக்கின்றனர் – தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி
அதிகாரமாற்றம் இலகுவானதாகயிருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மாற்றங்கள் நிகழ்வதை உயர்குழாமை சேர்ந்த சிறிய குழுவினர் தடுத்துவருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். லண்டன் பெண்கள் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையி;ல் கடந்த 76மேலும் படிக்க...
சந்திரிகா தனது நிலைப்பாட்டை மாற்றியதால் புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். கடந்தமேலும் படிக்க...
தேசிய வளங்களை விற்பனை செய்து எமது நிர்வாணத்தை முழு உலகுக்கும் காட்சிப் படுத்த வேண்டாம் – அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர்
ஆட்சியாளர்கள் அனைத்து விடயங்களையும் அரசியல் மயமாக்காமல் சிறந்த அரச நிர்வாகத்தையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டும். அரச பொறிமுறைகள் தர்மத்துடன் இணைந்து செயற்படும்போதுதான் நாடு செழிப்பாகும் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் தெரிவித்தார். தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்குமேலும் படிக்க...
அநீதிக்கு எதிராக அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு
அநீதிக்கு எதிராக சனிக்கிழமை (16) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக வடகிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்புவிடுத்துள்ளார். கடந்த மகாசிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாகிகள்மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டுமேலும் படிக்க...
இந்திய படகுகளின் அத்து மீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடல் தொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதுமேலும் படிக்க...
மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் உடனடியாக நாட்டுக்கு அனுப்புவது தொடர்பாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 256
- மேலும் படிக்க