இலங்கை
இலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கி உள்ளது
இலங்கை 16 ம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் நிற்பவராக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். 2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில்மேலும் படிக்க...
பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ
தேசிய வளங்கள் பிற நாட்டவருக்கு சொந்தமாவதை தடுப்பதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும். பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெற்று பலமான அரசாங்கத்தினை தோற்றுவிக்கும் என எதிர்க்கட்சிமேலும் படிக்க...
மயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்
எதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே அவர்களுடைய எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது. எனினும் நான் ஜனாதிபதி தலைமையில் வெற்றியீட்டிய பின்னர் எனது தலைமையில் ஒருமித்த சுபீட்சமான இலங்கையொன்று உருவாக்கப்படும் புதிய ஜனநாயகமேலும் படிக்க...
“புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்து வந்ததிலும் சரி அழிக்கப் பட்டவர்கள் தமிழர்களே”
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ் மக்களேயாகும். தெற்கில் யுத்த அச்சம் மட்டுமே இருந்தது ஆனால் வடக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிடமுடியாது என தேசியமேலும் படிக்க...
கோத்தாவின் குடியுரிமை குறித்து, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும்: மனோ கணேசன்

அமெரிக்கா இலங்கையின் நட்பு நாடு. இன்றைய சூழலில் கோத்தபாய ராஜபக் ஷவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா தமக்கு ஒன்றும் தெரியாது என்று நடிப்பதை நிறுத்தி விட்டு, அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் உண்மை நிலைவரத்தை விளக்கி அறிக்கை வெளியிட வேண்டும்.மேலும் படிக்க...
சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது : சுமந்திரன்
சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே சிங்களவர்களைத்மேலும் படிக்க...
தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் 12 மணியுடன் நிறைவு
நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் பிரசார பணிகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமைதிக்காலம் கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, அந்த காலப்பகுதியில் எந்தவித பிரசாரங்களையும்மேலும் படிக்க...
குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எதற்கு? – ஹிருணிகா கேள்வி
குற்றவாளிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்க முடியுமாக இருந்தால், நீதிமன்றங்கள் எதற்காக நாட்டில் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும்மேலும் படிக்க...
ஏனையோருக்கு அளிக்கின்ற வாக்குகள் கோத்தாவுக்கு அளிக்கும் வாக்குகளாகவே அமையும் – மனோ!
சஜித்தும், கோத்தாபயவும் 50 சதவீத வாக்குகளுக்காகப் போட்டியிடும் போது 5 சதவீதத்திற்காகப் போட்டியிடுகின்ற அநுரகுமாரவிற்கு வாக்களித்து, வாக்குகளை விரயமாக்க முடியாது. அதேபோன்று வடக்கிலிருந்து சிவாஜிலிங்கமும், கிழக்கிலிருந்து ஹிஸ்புல்லாவும் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒப்பந்தக்காரர்கள். உண்மையில் இவ்வாறான ஒப்பந்தக்காரர்களுக்கு வாக்களிப்பதும், அநுரகுமார திஸாநாயக்கவிற்குமேலும் படிக்க...
தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சுரேன் ராகவன்
சென்னைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் சென்னையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது ஆளுநர் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும்மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சம் வாக்காளர்கள் – 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள்
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும், 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சர்வதேசம் மிக உன்னிப்பாக அவதானிக்கும் சூழலில் இம்முறை தேர்தல் நடைபெறுகிறது. முதலில் நடைபெறுவதுமேலும் படிக்க...
இன்று முதல் யாழில் இருந்து இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விமான சேவை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றது. சென்னையிலிருந்து முதலாவது விமானம் இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. முதல் கட்டமாக வாரத்திற்கு மூன்று சேவைகள்மேலும் படிக்க...
அதிகாரத்தை வழங்கினால் தீர்வு நிச்சயம்: மஹிந்த
தேசியப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு குறித்து நல்லாட்சி அரசாங்கம் கூட்டமைப்புடன் இணைந்து பல்வேறு கருத்துக்களைக் கூறிவந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எதனையுமே செய்யவில்லை. அவ்வாறான நிலையில் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அந்த விடயங்களை உள்ளீர்ப்பது வேடிக்கையான விடயமாகவுள்ளது என்று பொதுஜன பெரமுனவின்மேலும் படிக்க...
2015 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி பணிகளும் 16 ஆம் திகதிக்கு பின் ஆரம்பிக்கப்படும் – மன்னாரில் மஹிந்த
நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேளைத்திட்டங்களும் எமது அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னார் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும்,எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்மேலும் படிக்க...
முதலாவது இனிங்ஸ் முடிந்துவிட்டது. இனி இரண்டாவது இனிங்ஸ் ஆரம்பம் – மனோ கணேசன்
புதிய ஜனநயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெரும் வரை நாம் ஓய மாட்டோம். காரணம் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக மக்களுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே சஜித் பிரேமதாச வெற்றியின் பின்மேலும் படிக்க...
“தமிழர்களுக்கான தியாகங்களை செய்யத் தயார், கோத்தாபயவின் வெற்றியில் தமிழர்களது பங்களிப்பு இருக்க வேண்டும்”
தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்ய நாம் தயாராக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவ்வாறெனில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் நிறைவேற்ற முடியாத ஐந்து காரணிகளில்மேலும் படிக்க...
இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்துக்காக சஜித்தை ஆதரிப்போம் – யாழ்.மாவட்ட இளைஞர் அணி
இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்துக்காக சஜித் பிரேமதாசவை ஆதரிப்போம் என சஜித் பிரேமதாச இளைஞர் அணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் தலைவருமான திலீப்குமார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மாவட்ட இளைஞரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில்மேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்
கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரினால் கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமைமேலும் படிக்க...
அமெரிக்காவின் பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை – வெடித்தது சர்ச்சை
அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பெயர்களை உள்ளடக்கிய – இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குரிய பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை. அமெரிக்க குடியுரிமையைத் துறந்த 183 பேரின் பட்டியல் அடங்கிய அறிவிப்பை அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
அமெரிக்கருக்கும் இலங்கையருக்கும் இடையிலான போர் – ஹரின் பெர்னான்டோ
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இன்னமும் கைவிடவில்லை என்பதை, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தின் பட்டியல் உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ‘2019 அதிபர் தேர்தல் இப்போது அதிகாரப்பூர்வமாக ஒரு இலங்கையருக்கும் ஒரு அமெரிக்கருக்கும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 368
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- …
- 433
- மேலும் படிக்க
