தேர்தலை பிற்போட தேர்தல்கள் ஆணைக்குழு ஒருபோதும் இடமளிக்காது
மாகாணசபைத் தேர்தல் முதலில் நடத்தப்படுவதால் அது எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை பாதிக்காது. இதனை காரணம் காட்டி ஜனாதிபதித் தேர்தலை பிற்போட தேர்தல்கள் ஆணைக்குழு ஒருபோதும் இடமளிக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அத்துடன் இவ்வருடம் நவம்பர் 10 – டிசம்பர் 8 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.