இலங்கை
மன்னார் காற்றாலைத் திட்ட ஆய்வுக்காக சென்ற குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்

இரண்டு மாதங்களுக்கும் மேலாக உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக போராடுகின்ற போதிலும், அவர்களையும் மீறி காற்றாலைகளை நிறுவுவதற்காக நிலத்தை ஆய்வு செய்ய மன்னாருக்கு சென்ற ஒரு குழுவினரை அந்தக் கிராமமக்கள் விரட்டியடித்துள்ளனர். காற்றாலைகளை நிறுவுவதற்கான நிலத்தை ஆய்வு செய்வதற்காக மன்னார், பேசாலை பிரதேசமேலும் படிக்க...
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி

இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்திய வீட்டுத் திட்டம், மலையக மக்களுக்குரிய உரிமைகள்மேலும் படிக்க...
நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் சாத்தியம் – ஆனந்த பாலித எச்சரிக்கை
மின்சார பொறியாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக நாடு முழுவது மின் தடை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை எனவும், அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும்மேலும் படிக்க...
மானியங்கள் வழங்கி மீன் பிடித்துறையை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை – இராமலிங்கம் சந்திரசேகர்
மீன் பிடித்துறையை முன்னேற்றுவதற்கு மானியம் வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், இயந்திர மீன்பிடி படகுகளுக்காக இரண்டு மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை வழங்கவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ்மேலும் படிக்க...
பஸ்களில் நவம்பர் முதல் டிஜிட்டல் கட்டணமுறை அறிமுகம்
எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் பேருந்துகளில் டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதுடன், வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பயணிகள் கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இந்தமேலும் படிக்க...
தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் வெகுவிரைவில் – சுனில் வட்டகல

“பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். அந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது வெகுவிரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.” – இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதிமேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள்

வடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று(07) ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர் போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில்மேலும் படிக்க...
மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர, மகிந்த ராஜபக்ச ஒருமேலும் படிக்க...
ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்காலக் கலந்துரையாடலாகமேலும் படிக்க...
தீவிர சைவ உணவு பழக்கமுடைய இலங்கை வைத்தியர் மரணம்: கட்டார் எயார்வேஸ் மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த 85 வயதுடைய ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜயவீர, கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் தாம் கோரிய சைவ உணவு (Vegetarian Meal) மறுக்கப்பட்டதன் விளைவாக, வேறு உணவு தொண்டையில் சிக்கி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர்மேலும் படிக்க...
தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் தென் கிழக்கு கரையோர பகுதி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (07) திடீர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பேருந்துகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு பேரணியாக வந்து தங்களதுமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கோரிக்கைளை பரிசீலிக்க அரசாங்கம் தயார்
முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பாக விடுத்த கோரிக்கைகளை பரிசீலிக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால, ஜனாதிபதிகளின் உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின்மேலும் படிக்க...
இலங்கை இன்னும் பொருளாதார மீட்சியில் முழுமை அடையவில்லை – உலக வங்கி

இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடையவில்லை என்பதுடன் கணிசமாக வறுமையும் உயர்ந்துள்ளதாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
யாழ். புன்னாலைக் கட்டுவனில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயம்

பலாலி வீதி புன்னாலைக்கட்டுடன் பகுதியில் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கிமேலும் படிக்க...
இன்று தங்காலை காவல்துறையில் முன்னிலையாக முடியாது – விமல் வீரவன்ச
தங்காலை காவல் நிலையத்தில் இன்று முன்னிலையாக முடியாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தனக்கு மற்றொரு திகதியை வழங்குவதற்கு இணங்கியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தங்காலை காவல் நிலையத்தில்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை
மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனினும், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மின் விநியோகத் தடையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, தொழில்நுட்ப வல்லுநர்கள்மேலும் படிக்க...
நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது – பிமல்

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்மேலும் படிக்க...
மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் இன்று முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் எம்.டி.ஆர். அதுல இதனைத் தெரிவித்தார். அதன்படி, மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன்மேலும் படிக்க...
பிரிட்டனின் புதிய பிரேரணையில் “இனமோதல்” எனும் பதம் சேர்ப்பு: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளைய தினம் நிறைவேறும்; வாக்கெடுப்பைக் கோராதிருக்க இலங்கை உத்தேசம்?

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பிரேரணை நாளைய தினம் (6) ஐக்கியநாடுகள் மனித உரிமைகள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- …
- 469
- மேலும் படிக்க
