இலங்கை
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ கால எல்லை உறுதிப்படுத்தப் பட வேண்டும்- கபே அமைப்பு
உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என கபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அண்மையில் மார்ச் 12 இயக்கத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த zoom கலந்துரையாடலின் போதே கபேமேலும் படிக்க...
அடிமட்ட வாக்காளர்களுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு !
வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களை இலக்காகக் கொண்டு கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. பல சமீபத்திய மாற்றங்கள் காரணமாக, கட்சியிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொண்ட பலர் மீண்டும் வந்து கட்சியைமேலும் படிக்க...
மரண தண்டனைக் கைதியை அரசு விடுவித்துள்ளமை தொடர்பாக சிறிதரன் கருத்து
அரசியல் கைதிகள் 16 பேரின் விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
ஜனாதிபதியின் நாட்டுக்கான உரை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி விசனம்!
நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தொடர்பாக விமர்சிக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று (சனிக்கிழமை) விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் எதிர்பார்த்த விதமாக ஜனாதிபதியின் உரை அமையவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமமேலும் படிக்க...
இலங்கைக்கு அருகிலுள்ள கடற் பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!
இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் தீப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கை கடற்படையினர் இந்த விடயத்தினைத் உறுதிப்படுத்தியுள்ளதாகமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது – சிசிர ஜயக்கொடி!
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – நாகவிகாரையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு – குரலற்றவரின் குரல் அமைப்பு
11 மாத காலத்தில் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையாக இருந்தவருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுத்துள்ளார் என குரலற்றவரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். பொசனை முன்னிட்டு ஜனாதிபதியால் 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்புமேலும் படிக்க...
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. அதன்படி, அவர் நாளை இரவு 8.30 மணிக்கு உரை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு மேலும்மேலும் படிக்க...
யாழில் கொரோனா பாதிப்பு 5,000ஐ நெருங்கியது- உயிரிழப்பும் அதிகரிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை நெருங்கியுள்ளது. யாழில் இன்று (புதன்கிழமை) 33 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு நான்காயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனாமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்று (புதன்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால்,மேலும் படிக்க...
மீளவும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு!
இலங்கையில் நேற்று (புதன்கிழமை) இரவு 10.00 மணி முதல் மீளவும் பயணக்கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில்,மேலும் படிக்க...
முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச் சாட்டும் இன்றி விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யுமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார். இந்த விடயத்தில்மேலும் படிக்க...
கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது இராணுவ மயமாக்கலுக்கு வழிவகுக்கும் -ரணில்
கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுல் படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடுகள்
நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் மீண்டும் பயணf;கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. பொசன் பூரணை தினமான நாளை மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி இன்றுமேலும் படிக்க...
பிள்ளையான் போன்று அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்
பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர், இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்மேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது – மிச்சேல் பெச்சலட்
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து 300 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களை தடைசெய்வது உள்ளிட்ட சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது என ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விசாரணையின்றி, இரண்டு ஆண்டுகள்மேலும் படிக்க...
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் பரவியிருக்கலாம் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என சுகாதார ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சமூகத்தில் மாறுபாட்டில் கண்டறியப்படாத பல வழக்குகள் இருக்கலாம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பயணத்மேலும் படிக்க...
நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்பிப்பு
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பை ஐக்கிய மக்கள் சக்தியினரினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. எரிபொருள் விலை உயர்வுக்கு அமைச்சர் பொறுப்புக் கூற வேண்டும் எனமேலும் படிக்க...
அரசாங்கத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
அரசாங்க தகவல் நிலையத்தில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் உடனடியாக அதனை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- …
- 257
- மேலும் படிக்க