இலங்கை
இலங்கைக்கு 18 நாட்களில் 1,09,410 சுற்றுலாப் பயணிகள் வருகை

மார்ச் மாதத்தின் முதல் 18 நாட்களில் இலங்கைக்கு 109,410 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 27,613 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்தமேலும் படிக்க...
காணாமல் போன யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த வைத்தியர் தயாளினி திலீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த விரிவுரையாளரின் மகன், தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை எனமேலும் படிக்க...
தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி – ஐந்துமுனை போட்டி
தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி,மேலும் படிக்க...
சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் கைது

நீர்கொழும்பு, போருதொட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், அதன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டமேலும் படிக்க...
மட்டு நகருக்கு சென்று காணாமல் போன இளம் தாயுடன் குழந்தை உயிருடன் மீட்பு – அழுகிய நிலையில் பெண் ஒருவர் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 1/2 வயது குழந்தையுடன் நேற்று முன்தினம் சென்று காணாமல் போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும் , குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில்மேலும் படிக்க...
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

ரமழான் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் சுபீட்சம் நிறைந்த வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் பிறரின் துன்பங்களை உணர்ந்துகொள்ளுதல் போன்ற உன்னத மனிதாபிமானப்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்தின் 5வது, 6வது மீளாய்வு குறித்து முக்கிய தீர்மானம்

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட நிதியுதவி (EFF) திட்டத்தின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை ஒன்றிணைந்து முன்னெடுப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும்மேலும் படிக்க...
துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,மேலும் படிக்க...
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விசேட சைபர் பாதுகாப்பு பயிற்சி

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், நாடாளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவு (Sri Lanka CERT) நிறுவனம் அண்மையில் நடத்தியுள்ளது அரசு அதிகாரிகளின் டிஜிட்டல் பாதுகாப்புத்மேலும் படிக்க...
100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (20) முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், சந்தையில்மேலும் படிக்க...
நாடாளு-மன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு பிரேரணை முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெறும் நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்குமேலும் படிக்க...
புனித தலைப்பிறை தென்படவில்லை – நாளை மறுநாள் நோன்பு பெருநாள்

புனித நோன்புப் பெருநாள் நாளை மறுதினம் (21) கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (19) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போதுமேலும் படிக்க...
உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி’ எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19)மேலும் படிக்க...
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

முஸ்லிம்களின் நாளாந்த ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். இஸ்லாமிய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், மதமேலும் படிக்க...
கட்டார் மன்னருடன் ஜனாதிபதி விசேட தொலைபேசி கலந்துரையாடல்

வளைகுடா நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் கட்டார் இராச்சியத்தின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல் தானியுடன் விசேட தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். நெருக்கடி சூழ்நிலை குறித்து இரு நாட்டு தலைவர்களும்மேலும் படிக்க...
இலங்கையின் கடன் தரப்படுத்தல் மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் இல்லை

தற்போதைய நிலையில் இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தல் மேலும் வீழ்ச்சியடைவதற்கான பாரிய அபாயம் இல்லை என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்த விலை அதிகரிப்பு என்பன, உள்நாட்டுமேலும் படிக்க...
ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்

இலங்கை கடற்பரப்பிற்குள் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியுள்ள ஈரானியக் கப்பல் தொடர்பான புதிய தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் பகிர்ந்துள்ளார். ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr என்ற கப்பலைத் திட்டமிட்டபடி திருகோணமலை துறைமுகத்திற்கு இன்னும் கொண்டுமேலும் படிக்க...
இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert), பாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation) ஏற்பாடு செய்திருந்த தூதுவர்களுடனான வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றினார். உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இலங்கையுடனான உறவை வலுப்படுத்தவும் இந்தியப் பெருங்கடல்மேலும் படிக்க...
இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு

நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்தப்பு இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19)மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 437
- மேலும் படிக்க
