இலங்கை
அடுத்த வாரம் கொவிட் தடுப்பூசிகள் குறித்த கலந்துரையாடல்!!
கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் தடுப்பூசியை வழங்குவதற்கான செயற்றிட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்கவிற்குமேலும் படிக்க...
விவசாயிகளை சந்தித்து உரையாடிய ஜனாதிபதி
நேற்று (26) பிற்பகல் அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழுமேலும் படிக்க...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் பல்லவராயன்- கட்ட சோலை மாதிரி கிராம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்றமேலும் படிக்க...
ஜனாசா எரிப்பிற்கு எதிராக வவுனியாவில் வெள்ளைத்துணி போராட்டம்
முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளைத்துணி கட்டும், கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. வவுனியா மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்மேலும் படிக்க...
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தினம் யாழில் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு அனுஷ்டிப்பு
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின்னர் கேட்போர் கூடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.மேலும் படிக்க...
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது,மேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விவகாரம் – அவசர கூட்டத்திற்கு அழைப்பு!
கொரோனாவுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக இன, மத, அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரும் அணி திரள வேண்டும் என அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழ் தலைவர்கள் வெறுமனே கடிதம் எழுதுவதை விடுத்து அரசியல் கைதிகள் விடுதலைக்காகமேலும் படிக்க...
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த 2004ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்டோரின் 16ஆம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட இறைவனை பிராத்திப்போம்- இம்மானுவேல்
மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விரைவாக விடுபட, நத்தார் காலத்தில் இறைவனை வேண்டுவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் நத்தார் திருவிழா தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
தெற்கு மாகாணத்தில் 771 பேருக்கு கொரோனா- மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
தெற்கு மாகாணத்தில் இதுவரை 771பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாணத்தின் கொரோனா தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய காலி மாவட்டத்தில் 438 பேருக்கும் மாத்தறை மாவட்டத்தில் 266பேருக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 67பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
நத்தார் பண்டிகை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வுகளை ஊக்குவிக்கிறது- வடக்கு மாகாண ஆளுநர்
நத்தார் பண்டிகை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வுகளை ஊக்குவிக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண ஆளுநர் மேலும் கூறியுள்ளதாவது, “நத்தார்மேலும் படிக்க...
வவுனியாவில் பல குடும்பங்களுக்கு உணவுப்பொதி கிடைக்கவில்லை – ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் செல்வம்
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் மூலம் கொண்டு வந்துள்ளார். இன்று(வியாழக்கிழமை) அவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியாவின் உள்ள திருநாவல்குளம், மகாரம்பைக்குளம், ஸ்ரீநகர், கற்குழிமேலும் படிக்க...
அரசியலுக்காக இங்கு வந்து யாரும் பேச வேண்டிய தேவை கிடையாது – பிள்ளையான்
மட்டக்களப்பு மேச்சல்தரை மற்றும் தொல்பொருள் தொடர்பாக 2016, 17ம் ஆண்டு ஆரம்ப திட்டம் நடப்பதற்கு அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தமிழ் தேசிய கூட்மைப்பு எனவும், இவர்கள் வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்தால் எடுத்த பணிதான் இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது எனமேலும் படிக்க...
சர்வதேச விசாரணையே ரெலோ இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு – செல்வம்
சர்வதேச விசாரணையே ரெலோ இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனிதமேலும் படிக்க...
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொரளை மயானத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் 35 ஆயிரத்து 640 பேர் பாதிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வந்த அடை மழை காரணமாக 10 ஆயிரத்து 716 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார். கடந்த 21, 22ஆம் திகதிகளில்மேலும் படிக்க...
பண்டிகை காலத்தில் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்க்கவும் – யாழ். அரசாங்க அதிபர்
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்
பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று பரவும் நிலையில் அங்கிருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை இடைநிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார். நாளாந்தம் கூடும் கொவிட் தொடர்பான கூட்டத்தில் கொவிட் புதிய வைரஸின் தோற்றம் மற்றும் அதன் பரவல் தொடர்பில்மேலும் படிக்க...
இலங்கையில் முன் எடுக்கப்பட்ட குழந்தைகள் வியாபாரம் அம்பலம்
கர்ப்பிணி பெண்களை சில ஒப்பந்தங்களுக்கு உற்படுத்தி அவர்களுடைய குழந்தைகளை விற்பனை செய்யும் மோசடி வியாபாரம் ஒன்று தொடர்பில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த மோசடியில் ஈடுபட்ட 47 வயதுடைய நபர் ஒருவர்மேலும் படிக்க...
இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கு ஐ.நா சபையின் ஆதரவு உறுதி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இன்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி வழங்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- …
- 256
- மேலும் படிக்க