Main Menu

தெற்கு மாகாணத்தில் 771 பேருக்கு கொரோனா- மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

தெற்கு மாகாணத்தில் இதுவரை 771பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாணத்தின் கொரோனா தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய காலி மாவட்டத்தில் 438 பேருக்கும் மாத்தறை மாவட்டத்தில் 266பேருக்கும்  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 67பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கொரோனா தகவல் மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சாமரா மகாகமகே  தெரிவித்துள்ளதாவது, “தெற்கு மாகாணத்தில் நேற்று மாத்திரம் 11பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலியில் 6 பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் 5பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாத்தறை மாவட்டத்தில் புதிய தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை தெற்கு மாகாணத்தில்  266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். காலியில் இருந்து 167 பேரும்,  மாத்தறையில் இருந்து 72பேரும்  ஹம்பாந்தோட்டையைச் சேரந்த  27 பேரும் இவ்வாறு தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...