Author: trttamilolli
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் சில குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசியமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு குருதியுறைதல் ஏற்படுகின்றமை ஆய்வில் கண்டறிவு
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு குருதியுறைதல் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 1 மாதம் நிறைவடைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நிபுணர் குழுவொன்று, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த சுமார்மேலும் படிக்க...
இந்தியாவுக்கு 2ஆவது முறையாகவும் மருத்துவ உபகரணங்களை வழங்கியது இங்கிலாந்து
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெரும்பாலான நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை 2ஆவது முறையாக வழங்கி வைத்துள்ளன. அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை), 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் லூப்தன்ஸாமேலும் படிக்க...
இந்தியாவில் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
இந்தியாவில் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டள்ளதாவது, “கடந்த 24 மணி நேரத்தில் 4,01, 993 பேருக்கு, கொரோனாமேலும் படிக்க...
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : சிறப்பு அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதில் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாவட்ட சுற்றுமேலும் படிக்க...
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையில் அரசாங்கம் செயற்படும்- ஜனாதிபதி
கொரேனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையில் அரசாங்கம் செயற்படுமென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறுமேலும் படிக்க...
தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்- மஹிந்த
தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
சர்வதேச தொழிலாளர் தினம்: புதிய முறையில் தொழிலாளர் தினத்தை கொண்டாடும் இலங்கை
சர்வதேச தொழிலாளர் தினம் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இணையத்தளத்தின் ஊடாக தொழிலாளர் தினத்தை இன்று கொண்டாடுகின்றன. மேலும் பிரதான அரசியல் கட்சிகள், வழமைப்போன்றுமேலும் படிக்க...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கை இடைநிறுத்த கட்டளை- எம்.ஏ.சுமந்திரன்
கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்துமேலும் படிக்க...
நாடு முழுவதும் திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால், திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு, இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல், இரண்டு வாரங்களுக்கு குறித்தமேலும் படிக்க...
மருத்துவமனையில் நடந்த கொலைவெறி தாக்குதல்- 4 பேர் உயிரிழப்பு
மருத்துவமனையில் கொல்லப்பட்டவர்கள் தீவிரமான மற்றும் தீவிர வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென ஒரு நபர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர்மேலும் படிக்க...
மத நிகழ்ச்சியில் கடும் நெரிசல்- 44 பேர் பலியான சோகம்
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதிடெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் மவுண்ட் மெரான் பகுதியில் நேற்று இரவு யூதர்களின் பாரம்பரிய மத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானமேலும் படிக்க...
நாளை மே தினம்: எடப்பாடி பழனிசாமி- தலைவர்கள் வாழ்த்து
நாளை மே தினம் கொண்டாடப்படுவதையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் உன்னத தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தினமேலும் படிக்க...
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் யார்- யாரை ஈடுபடுத்த வேண்டும்? ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் யார்- யார் என்பது பற்றிய பட்டியல் தயாராக உள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகமேலும் படிக்க...
இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்
அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இன்று காலை காலமானார்.பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுமேலும் படிக்க...
வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்ற மக்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றம்
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தினை நீடிக்க யோசனைகள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்றவர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அடையாளம் காண்பதற்கு இது உதவும் என பொது சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்மேலும் படிக்க...
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவித்தல்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ் மற்றும் ஜும்ஆ தொழுகை உள்ளிட்ட ஏனைய கூட்டுப் பிராத்தனை நிகழ்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதேமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்: ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் தொடர்பான தகவலை வெளியிட்டார் பொலிஸ்மா அதிபர்
ஈஸ்டர் தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பாக ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மேலும் படிக்க...
தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களுக்கு கொவிட்-19 பரவல் அபாயம் குறைகிறது!
அஸ்ட்ராஸெனா மற்றும் ஃபைஸர்- பயோன்டெக் ஆகிய தடுப்பூசிகளின் முதல் அளவை பெற்றவர்களுக்கு கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைவதாக இங்கிலாந்து பொது சுகாதார துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல, தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்கு பிறகுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- …
- 827
- மேலும் படிக்க