Main Menu

A4 நெடுஞ்சாலையில் விபத்து! – உந்துருளியில் பயணித்த இளைஞன் பலி.

A4 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துல் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார்.  Jossigny, Seine-et-Marne நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை 8 மணியில் இருந்து 8:30 இற்குள்ளாக இந்த விபத்து பதிவாகியுள்ளது. உந்துருளியில் பயணித்த இளைஞன் வாகன நெரிசலுக்குள் நுழைந்து வேகமாக செல்ல முற்பட்டுள்ளார். அதன்போது உந்துருளியின் கைபிடி மகிழுந்து ஒன்றுக்குள் சிக்குண்டு உந்துருளி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விபத்து ஏற்பட்டது.  சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். முதலுத சிகிச்சைகள் அளித்தும் இளைஞனை காப்பாற்ற முடியவில்லை. இளைஞன் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார். மூன்று வழிச் சாலையில் ஒரு வழியில் மாத்திரம் மூன்று மணிநேரங்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. 

பகிரவும்...