Main Menu

அதியுச்சக் கொரோனாப் பரவலால் தேசிய தினக் கொண்டாட்டங்கள் இரத்து

கொரோனாத் தொற்றின் வேகம் மிகவும் அதிகரித்திருப்பதால், LAVAL நகரம் 14 ஜுலை தேசியதின நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் இரத்துச் செய்துள்ளது.

Pays de la Loire  மாகாணத்தின் Mayenne மாவட்டத்தின் முக்கிய நகரமான Laval நகரத்தில் கொரோனாத் தொற்றானது மீண்டும் முழுவீச்சில் ஆரம்பித்துள்ளது.

கடந்த 25 மற்றும் 30ம் திகதி ஜுன் மாதத்திற்குள் 54 ஆக இருந்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்தது. 30ம் திகதி ஜுன் மாதத்திற்கும் 6ம் திகதி ஜுலை மாதத்திற்கும் இடையில் இது மீண்டும் இரட்டிப்பாகி,  109 இலிருந்த 219 ஆக அதிகரித்துள்ளது.

இங்கு கொரோனாத் தொற்றுத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் Laval நகரத்தின் புதிய நகரபிதா Florian Bercaultஅனைத்து நிகழ்வுகளையும் இரத்துச் செய்துள்ளார்.

பிரான்சில் இரண்டாவது தொற்றலைக்கான ஆபத்து, எமானுவல் மக்ரோனை விட,  அனைத்து ஆராய்சியாளர்களாலும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...