Main Menu

நேபாள பேரிழப்பு பெரும் கவலையளிக்கிறது – வௌிவிவகார அமைச்சர்

நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் வௌ்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து பெரும் கவலையடைவதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர் தமது எக்ஸ் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக இந்தச் சவாலான காலத்தை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாள அதிகாரிகள் மற்றும் அனைத்துப் பணியாளர்களின் முயற்சிகளையும் நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.

இந்தச் சவாலான காலகட்டத்தைக் கடந்து செல்லும் நேபாள அரசாங்கத்துடனும் மக்களுடனும் இலங்கை முழுமையான ஆதரவுடனும் தோழமையுடனும் நிற்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.