விடுமுறை முகாம் மீது வான்வழித் தாக்குதல்: 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி
யுக்ரைனின் ஜாபோரிஜியா (Zaporizhzhia) பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள விடுமுறை முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோதே திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஆளுநர் எவ்ஜெனி பாலிட்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து கியிவ் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
குறித்த தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்ய விசாரணைக் குழு பயங்கரவாத வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
