Main Menu

ஜெர்மனியில் மக்கள் பேரணி மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி, 14 பேர் காயம்

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ‘பிரைட்’ (Pride) பேரணியின் போது மக்கள் கூட்டத்திற்குள் சிற்றூந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெர்லினில் பேரணி நடைபெற்ற பகுதிக்கு அருகே மக்கள் திரண்டிருந்த கூட்டத்திற்குள் வாகனம் ஒன்று அதிவேகமாகப் புகுந்து மோதியது.

இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக நிகழ்வுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் அவசரக்கால மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.