இயக்குநர் அவதாரத்தைத் தொடர்ந்து நடிகராகும் ஜேசன் சஞ்சய்?
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், அடுத்ததாக நடிகராகத் திரையில் தோன்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் அவதாரத்திற்குப் பிறகு, தந்தை விஜய்யைப் போலவே ஜேசன் சஞ்சய் நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கவுள்ளார்.
ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிப்பதற்கான கதைகளைத் தேடும் பணியில் லைகா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜேசன் சஞ்சய் விரைவில் திரைப்படங்களில் கதாநாயகனாகத் தோன்றுவார் என்பது குறித்து சினிமா தரப்புக்களில் தற்போது பேச்சுக்கள் எழுந்துள்ளன.
