Main Menu

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டமைக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் அதன் திறமையின்மையுமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த நெருக்கடி நிலைக்கு தற்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் நிலவரம் குறித்து இன்று திங்கட்கிழமை (06) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.