Main Menu

வைத்தியர் ஷாபி பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு

வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று பொது பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
இனங்களுக்கு இடையே முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில், திட்டமிடப்பட்ட சதித்திட்டமாகப் போலியான அறிக்கையை வெளியிட்டுத் தன்னை கைது செய்து துன்புறுத்தியமைக்காக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், 5 ஆண்டுகள் 6 மாதங்களாக இயன்றவரை தன்னை துன்புறுத்தினார்கள்.
நேற்று விடுதலையானது நான் இல்லை, நீதிக்காக நின்றவர்கள் அனைவரும்தான்.
இந்த தவறு வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க நான் செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு.
எனக்கு எதிராகச் செயல்பட்ட அனைவரின் சார்பிலும் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளேன்.
என்னைக் கைது செய்ததன் பின்னரே முறைப்பாடுகளைத் தேடிச் சென்றனர்.
எனக்கும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர் எனக் குறிப்பிட்டார்.
பகிரவும்...