Main Menu

ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் பல இடங்களில் போராட்டம்

நாட்டில் ஊரடங்குச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, காலி உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், களுத்துறை, பதுளை உள்ளிட்ட இடங்களில் வைத்தியசாலை ஊழியர்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

கருப்பு கொடிகளை ஏந்தியவண்ணம் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...