கெஹெலிய ரம்புக்வெல, யாழேந்திரன் ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்கிறார்கள்.
வடக்கில் தமிழ்மொழி பேசும் ஊடகவியலாளர்களின் தொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட தேவைகளை ஆராய்வதற்காக கண்காணிப்பு விஜயமாக இது அமைந்துள்ளதாக ஊடக அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
விஜயத்தின் போது அமைச்சர் தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர்களின் தொழில்துறை தேவைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
வடக்கிலுள்ள மாணவர்களை கல்வி மற்றும் ஊடகத்துறையில் ஈடுபடுத்துவது குறித்தும் அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.