Main Menu

இறுதி தேர்தல், இறுதி ஊடக சந்திப்பு- மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு

ஊடக சந்திப்பை மேற்கொள்ளும் இறுதி நாள் இன்றையநாள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “இது நான் பணியாற்றும் இறுதி தேர்தலாகும். உயிருடன் இருந்தால் அடுத்த தேர்தலில் வாக்களிப்பேன். 37 ஆண்டுகள் நான் இங்கு பணியாற்றியுள்ளேன்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நான் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைந்தேன். 1984ஆம் ஆண்டுமுதல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.

நான் இந்த ஆணைக்குழுவில் செய்யாத பணிகள் இல்லை. வாக்குப் பெட்டிகளையும் சுமந்துள்ளேன். அனைவருக்கும் மிக்க நன்றி! நான் மீண்டும் இந்த இடத்திலிருந்து ஊடக சந்திபை மேற்கொள்ளமாட்டேன்” என்றார்.

பகிரவும்...