Main Menu

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரேனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரையில் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 85 பேர் குறித்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக மேலும் 15 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலேயே புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அத்துடன் கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் திரையரங்குகள் உள்ளிட்டவற்றை இம்மாதம் இறுதிவரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மேலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.

பகிரவும்...