Main Menu

குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பது பா.ஜ.க.வுக்கு உயர்வு – சுப்பிரமணியன் சுவாமி

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.வுக்குச் சாதகமானது என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

அவரது டுவிட்டரில் பக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பதிவிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்க்கட்சிகள் அதிகமாக எதிர்க்க எதிர்க்க தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு நல்லது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தொடர்ந்தால், ஸ்ரீ 420 டெல்லி மாநில தேர்தலில் தோல்வியடையக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...