Main Menu

கோத்­த­பாயவால் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வித அசம்­பா­வி­தமும் ஏற்படவில்லை!- திஸ்ஸ விதா­ரண

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் பழிவாங்­கப்­ப­டுவர் என ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் போலித்­த­ன­மா­னதும் விஷ­மத்­த­ன­மா­ன­து­மான பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆனால், கோத்­த­பாய ராஜபக்ஷ வெற்றி பெற்றும் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக எவ்­வித அசம்­பா­வி­தமும் இடம்­பெ­ற­வில்லை.

மாறாக சக­ல­ருக்­கு­மான பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று ஸ்ரீலங்கா சம­ச­மாஜக் கட்சி பொதுச்­செ­ய­லா­ளரும் ஆளு­ந­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார். ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்­ன­ரான நிலை­மைகள் தொடர்பில் கருத்­து­ரைக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சாரக் காலத்­தின்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணைந்து கோத்­த­பாய ராஜபக் ஷ வெற்­றி­பெற்றால் வெள்ளை வேன் கலா­சாரம் உரு­வாகும் என்று போலித்­த­ன­மா­னதும் விஷ­மத்­த­ன­மா­ன­து­மான பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டனர்.

அது மட்­டு­மல்­லாமல், முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றை நடத்தி இரண்டு நபர்­களை அழைத்து வந்து கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் உத்­த­ரவின் பேரி­லேயே வெள்ளை வேனில் தமிழ் மக்­களை கடத்­திச்­சென்று கொலை செய்­த­தாகக் கூறப்­பட்­டது.

தற்­போது அது பொய் என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அதன் சார­திகள் என சந்­தே­கத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். விசா­ர­ணை­களின் இறு­தியில் உண்மை தெரி­ய­வரும்.

கோத்­த­பாய ராஜபக் ஷ இன­வாதி அல்ல. தான் எதிர்­பார்த்­த­ளவு தமிழ் மக்கள் வாக்­க­ளிக்­க­வில்­லை­யென்­றாலும் அம்­மக்­களை அர­வ­ணைத்து நாட்டை அபி­வி­ருத்தி செய்வேன் என அவர் பதவியேற்ற தினத்தில் கூறி­யது வர­வேற்­கக்­கூ­டிய விடயம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி மூன்று பிரிவுகளாக செயற்படுவதால் பொதுஜன முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார்.

பகிரவும்...