Main Menu

ஆப்கான் ஜனாதிபதி தேர்தல் – வாக்குச் சாவடியில் குண்டுத் தாக்குதல் : 16 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்று வரும் வாக்குச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது.

இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதால் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதையும் மீறி பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தலைநகர் காபூல் நகரிலுள்ள பகராம் மாவட்டத்தில் சம்சாத் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த 16 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குலை தலிபான்கள் மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...