சவுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் பலி
சவுதி அரேபியாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றுய தினம் அங்கு விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக, குறித்த இளைஞர் உட்பட மூவர், அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீது மகிழுந்து ஒன்று மோதியது.
இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றைய இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் சவுதிஅரேபிய காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.