Main Menu

ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியினால் தெரிவு – மங்கள

24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியினால் தெரிவு செய்யப்படுவார் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு பின்னர் வரலாற்றில் இடம்பிடிப்பவராக இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை தொடர்ந்தும் ஆளப்போகும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் உரிய சந்தர்ப்பத்தில் அறிவிக்கப்படுவார் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...