Main Menu

46 மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர் – இராணுவம்

நாடு முழுவதும் உள்ள 46 சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணும் தெரிவித்துள்ளது.

மேலும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்ததாக அடையாளம் காணப்பட்ட 163 பேர் கொண்ட மற்றொரு தொகுதியினர் இன்று விடுவிக்கப்படுவார்கள் என COVID-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மார்ச் 1 முதல் 15 வரை வெளிநாடுகளில் இருந்து வந்த சுமார் 20,000 பேரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் இதில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டவர்கள் உட்பட சிலர் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இருப்பினும் இதுபோன்ற வெளிநாடுகளில் இருந்துவந்தவர்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவுவாங்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பகிரவும்...