Main Menu

31வது நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். குலசேகரம்பிள்ளை சற்குமாரன் (12/03/2022)

தாயகத்தில் கரம்பொன் தெற்கை பிறப்பிடமாகவும்,
குளியாப்பிட்டியை வதிவிடமாகவும், தற்போது ஜேர்மனி Ellhofen Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம்பிள்ளை சற்குமாரன் அவர்களின் 31வது நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் மார்ச் மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகின்றது.

எம்மை எல்லாம் ஆறாத்துயரில் விட்டு மீளாத்துயில் கொண்ட
அமரர் சற்குமாரன் அவர்களை அன்பு மாமா, மாமி, தம்பி, தவலட்சுமி யாழ்ப்பாணம், அன்பு மனைவி சியாமளா,
பாசமிகு பிள்ளைகள் சசிலா, சஞ்சித், அன்பு சகோதரர் கிருஸ்ணபிள்ளை (அழகுராசா) கனடா, அன்பு மைத்துனர்கள் சற்குண தேவி, ரோகினி, ராஜேந்திரன், கெங்காதரன், பாஸ்கரன், சாந்தினி, விஜயராணி, மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கின்றார்கள்.

TRT தமிழ் ஒலி கலையக உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் அமரர் சற்குமாரன் அவர்களை நினைவு கூருவதோடு
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்தனை செய்து
பிரிவுத் துயரிலும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மனைவி சியாமளா மற்றும் பிள்ளைகள்

அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி

எமது கணவரின் மரண செய்தி அறிந்து TRT தமிழ் ஒலியூடாக இரங்கல் தெரிவித்த அன்பு நேயர்கள், பங்கு பற்ற முடியாது போன அன்பு உறவுகள், தொலைபேசியூடாகவும், நேரிலும் வந்தும் அனுதாபம் தெரிவித்து, இறுதி கிரியைகளிலும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

குடும்பத்தினர்

பகிரவும்...