Main Menu

31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம் (02/04/2021)

தாயகத்தில் மறவன்புலவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு, சுவிற்சர்லாந்து , லண்டன், பிரான்சையும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அன்னலஷ்மி ( அன்னம் ) இராஜேந்திரம் அவர்களின் 31ம் நாள் நினைவுதினமும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 02ம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

இன்றையதினம் 31ம் நாளில் நினைவுகூரப்படும் அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம் அவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் அன்பு பிள்ளைகள் பிரேமா (Swiss) , பிரேந்திரா (Swiss) சியாமளா (France), சிரோஜினி (France) , சுஜா (London) சுஜேந்திரன் (TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர் அரசியல் ஆய்வாளர் Swiss) மருமக்கள் ஜெயக்குமார், குமாரகுலசிங்கம், ஆனந்தநடேசன், உதயகரன், கௌரிகாந்தன், கலாமதி பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னையை நினைவு கூருகின்றார்கள்.

இன்றையதினம் 31ம் நாளில் நினைவுகூரப்படும் அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம் அவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் பங்கெடுத்துக் கொள்வதுடன் அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் பிரேமா , பிரேந்திரா, சியாமளா , சிரோஜினி , சுஜா சுஜேந்திரன்

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்

பகிரவும்...