Main Menu

31ஆம் நாள் நினைவு தினம் – அமரர்.கலாபூஷணம் கந்தையா சரவணபவன் (27/09/2021)

தாயகத்தில் தொல்புரம் மேற்கை பிறப்பிடமாகவும் நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூஷணம் கந்தையா சரவணபவன் அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 25 ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை அன்று வந்த நிகழ்வை 27 ஆம் திகதி செப்டம்பர் மாதம் திங்கள் கிழமை அனுஷ்டிக்கின்றார்கள்.

அன்னார் தொல்புரம் கந்தையா பாக்கியம் அவர்களின் அன்பு மகனும், நவாலியை சேர்ந்த மார்க்கண்டு செல்வரத்தினம் தம்பதிகளின் மருமகனும் ஆவார்.
இவரின் நல் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போர் தொல்புரம் கலாலயம் நாடக மன்றத்தினர், இவர்களோடு இணைந்து அன்பு மனைவி கமலாதேவி, அன்பு மகள் வேதாரணி, மருமகன் மயூரன், பேரன் அக்ஷ்ஸய், சகோதர சகோதரிகள், மைத்துனர்மார் ,மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள், அன்பர்கள், சக ஓவியர்கள், கலைஞர்கள், தொல்புரம் வாசிகள், நவாலியூர் வாசிகள், இவர்கள் அனைவரோடும் தம்பி உதயசந்திரன் செல்லையா, தங்கை சத்தியபாமா சுப்பிரமணியம் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றார்கள்.

இன்று 31ஆம் நாள் நினைவு அஞ்சலியில் TRT தமிழ் ஒலி அன்பு உறவுகள், அன்பு நேயர்கள், அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலை க்கு எடுத்து வருகின்றார்கள் தாயகத்தில் வசிக்கும் உறவுகள்
ஒன்றுவிட்ட சகோதரர்கள் செல்லையா உதயசந்திரன், சத்தியபாமா சுப்பிரமணியம்
அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...