Main Menu

3-ந்தேதி ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- கூட்டணி தலைவர்கள் பிரசாரம்

வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

இங்கு தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி பிரசாரம் செய்தார். 29-ந்தேதி வரை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் அதன்பிறகு சென்னை திரும்பினார்.

2-வது கட்ட பிரசாரத்துக்காக இன்று மாலை அங்கு செல்கிறார். ஆம்பூரில் உள்ள மிட்டாளத்தில் இருந்து மாலை 4 மணிக்கு பிரசாரத்தை தொடங்கி வீராங்குப்பம், வடசேரி, மதனாஞ்சேரி, செங்கிலிகுப்பம், ஆம்பூர் நகரம் வரை பிரசாரம் செய்கிறார்.

நாளை (2-ந்தேதி) மாலை குடியாத்தம் பகுதியில் உள்ள உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்திசவுக், குடியாத்தம் புதிய பஸ் நிலையம், பள்ளி கொண்டா ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

3-ந்தேதி மாலை வேலூர் மண்டித் தெருவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்கிறார். துரைமுருகன், ஜெகத்ரட்சகன், காந்தி எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வி, முகமது சகி உள்பட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

பகிரவும்...