Main Menu

234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுசென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது,
தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை. 

பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முறையாக பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது. 
மாலை 6 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம். 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பகிரவும்...