21ஆவது திருத்தச் சட்டத்தை அறிமுகப் படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
புதிய சீர்திருத்தங்களுடன் 20வது மற்றும் 19ஆவது திருத்தச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 21ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்காக அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.