Main Menu

2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டம்?

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளர்

தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலம் கூறுகையில்,

“புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை. புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளது. அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளோம்.

அமெரிக்க சட்டங்களை அமுல்படுத்துவதில் பைடன் தோல்வி அடைந்துவிட்டார். நாம் ஆரம்பித்த இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகுதொலைவு உள்ளது. புதிய கட்சியை ஆரம்பிப்பதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும்.

ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்” என கூறினார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். இதில் ட்ரம்ப் தோல்வியை தழுவினார்.

எனினும், தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப், கடுமையான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி என்ற பெயருடன் பதவியிலிருந்து நீங்கிச் சென்றார்.

பகிரவும்...