Main Menu

உள்கட்சி தேர்தல் பணிகள் முடிவடைந்ததும் தே.மு.தி.க.வில் பிரேமலதாவுக்கு புதிய பதவி?

தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் பணிகள் கடந்த 10-ந் தேதி தொடங்கி உள்ளது. வருகிற 24-ந் தேதி வரை 15 நாட்கள் முதல் கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. சேலம் கிழக்கு, மாநகர் சேலம் மேற்கு மாவட்டங்களில் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள கிளை கழங்களில் 9 கிளை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊராட்சி கழகத்துக்கு செயலாளர், 2 துணை செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநகராட்சி பகுதியில் வட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர், 4 துணை செயலாளர்கள், பகுதி பிரதிநிதிகள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுபோன்று அனைத்து மாவட்டங்களுக்கும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதுபோன்று உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதும் தே.மு.திக. பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளரான பிரேமலதாவுக்கு புதிய பதவி வழங்கப்பட உள்ளது. கட்சியின் செயல் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதுபோன்று விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணியில் பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர் அணி மாநில செயலாளராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...