Main Menu

போராட்டங்கள் நடுநிலைமையாக காணப்பட்டால் எதிர்காலத்திற்கு சிறந்த விடயம் – துமிந்த திசநாயக்க

காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடுநிலைமையானவையாக காணப்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக காணப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (சனிக்கிழமை ) 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்ப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசநாயக்க தெரிவிக்கையில் அரசியல்கட்சிகள் மக்கள் போராட்டத்திற்கு உரிமை கோரமுயல்கின்றன என்பதோடு பொதுமக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றிய பல தருணங்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்கள் தற்போது மாற்றத்தை கோருகின்றனர் எனவும் குறிப்பிட்டார் .

பகிரவும்...