Day: April 1, 2021
ஜேர்மனியில் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: ஜேர்மனி சுகாதார அமைச்சகம்
ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, பிரச்சினை இல்யென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்புமேலும் படிக்க...
விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மனிதர்களிடத்தில் மட்டுமன்றி விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம்மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது ஏன் – ஸ்டாலின்
இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது ஏன் என திமு.க தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாட்சியே சாட்சி எனவும் அவர் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
‘தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப் பட்டிருப்பது மகிழ்ச்சி’ – ரஜினிக்கு மோடி வாழ்த்து
வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினிகாந்த பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்திய சினிமாத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு, மத்திய அரசால் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.மேலும் படிக்க...
எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியல்ல – ராஜித
எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்கக் கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சினோபோர்ம் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் தடுப்பூசிகளையும் ஆய்வு செய்யமேலும் படிக்க...
ஜோசப் ஆண்டகை அவர்களின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் – சம்பந்தன்
முன்னால் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், “ஆண்டகை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் மக்களின்மேலும் படிக்க...
நாம் நட்பு நாடுகளில் பெரும்பான்மையை இழந்து விட்டோம்- கரு ஜெயசூரிய
கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு ஆதரவளித்த நட்பு நாடுகளில் பெரும்பான்மையை நாங்கள் இழந்துவிட்டோம் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றமேலும் படிக்க...